நடனம்

இந்­திய மர­பு­டைமை நிலை­யமும் ஆனந்தா மரபுக்‌கலைகள் கூடமும் (ஆட்டம்) இணைந்து வழங்கும் ‘நம் மரபு’ தொடரின் ஓர் அங்கமாக, கரகாட்ட கலையையும் தவில் கலையையும் சிங்கப்பூரர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து கலைமாமணி தேன்மொழியும் கலைச்சுடர்மணி ராஜேந்திரனும் இங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
துர்கா மணிமாறனின் ‘திரிபடாக்கா’ நடனக்குழு வழங்கும் ‘மகாலயா’ எனும் பரதநாட்டிய நிகழ்ச்சி, மே 11ஆம் தேதி இரவு 7 மணிக்கு ‘அலியான்ஸ் ஃபிரான்செஸ்’ அரங்கில் நடைபெறவுள்ளது .
கலை நயமும் கதை வளமும் ஒருசேர ‘நெசவு’ எனும் நாட்டிய நாடகத்தை தத்வா கலைக் குழுவினர் அரங்கேற்றினர். தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக அலிவால் கலை மையத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சனிக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி, ஜூரோங் குழும சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஏற்பாடு செய்த ‘சித்திரை வானவில்’ கொண்டாட்டங்கள், மாலை 5.30 முதல் 9 மணி வரை கிளமெண்டி சமூக மன்றத்தில் நடைபெற்றன.
பிள்ளைகளுக்குத் தமிழைக் கொண்டு சேர்க்க, முதலில் பெற்றோருக்கு அதன் முக்கியத்துவம் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் மசெக சமூக அறநிறுவனம் போட்டிகள் நடத்தியுள்ளது.